மண்ணை உழுபவருக்கு பெண் கொடு -
மரத்தை நடுபவருக்கு விருது கொடு -
பொது வேலையில் ஈடுபட சொல்லி கொடு -
பொது சேவை செய்பவருக்கு புகழ் கொடு -
தண்ணீரை சேமிக்க சொல்லி கொடு -
தாமதித்தால் பாலைவனமாகும் என சொல்லிவிடு
தாய் தந்தைக்கு நல்லதை செய் -
அவர்கள்
தளர்ந்த பின் நீ தளராமல் செய் -
உனக்காக ஒரு மரம் வை -
உன் குடும்பத்திற்காக ஒரு பத்து மரம் வை -
இதை உன் சொந்தங்களையும் செய்யச் சொல்லி வை -
பிள்ளை பிறந்தாலும் மரம் வை -
பேர் வைத்தாலும் மரம் வை -
மகள் பெரியவள் ஆனாலும்
மரம் வை -
நாட்டுக்காக நாலு நூறு மரம் வை -
இச்செயலை நண்பர்களையும் செய்ய சொல்லி வை -
இதை ஊராரிடமும் சொல்லி வை -
பசுமையை பற்றி சொல்லிக்கொடு -
அதை உருவாக்க இப்பவே முயற்சியை எடு -
வாழ்வதற்கு
காற்று தேவை - அதற்கு
மரங்கள் தேவை -
இதுவே நமக்கும், தலைமுறைக்கும் தேவை -
குளத்தை வெட்டி வை -
மரத்தை நட்டு வை -
நிலத்தை உழுது வை -
தண்ணீரை சேமித்து வை -
பல்லுயிரும் செழிக்க
பசுமை ஆகும் என்று சொல்லிவை!!!!
நல்லவைகளை முற்பகல் செய்யின்....பிற்பகல் விளையும்.....
அல்லவைகளை முற்பகல் செய்யின்....முற்பகலே விளையும்....
No comments:
Post a comment